பெற்ற தாயை கொலை செய்த பள்ளி மாணவன்!! படிக்க சொன்னதால் ஆத்திரம்!!

 
கொலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுங்கக்காரன்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் அருட்செல்வன். இவரது மனைவி யுவராணி. இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், தர்ஷினிஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இதில் யுவராணி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிகிறார். இவர்களுடைய  மகன் சஞ்சய் சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.

இரத்தம் வன்முறை க்ரைம் வெட்டு படுகொலை

இவனுக்கு படிப்பில் அதிக அக்கறையில்லை. இதனால் தாய் யுவராணி மகன் சஞ்சயை கண்டித்து வந்தார். சொல்பேச்சு கேட்காகததால்  ஹாஸ்டலில் கொண்டு சேர்த்தார். இதனால் யுவராணி மீது சஞ்சய் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அக்டோபர் 12ம் தேதி நள்ளிரவில் வீட்டில் யுவராணி, மகன் சஞ்சய், மகள் தர்ஷினிஸ்ரீ ஆகிய 3 பேரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதில் நள்ளிரவில் தாயை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

போலீஸ்

தூங்கிக் கொண்டிருந்த யுவராணியின் தலை மீது வீடு கட்ட பயன்படுத்தப்படும் ஹாலோ பிளாக் கல்லை தூக்கி போடு துடிக்க துடிக்க கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் யுவராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மகள் சத்தம் போடவே அங்கிருந்து சஞ்சய் தப்பி விட்டான். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் யுவராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படிக்காததை கண்டித்த தாயை 14 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web