ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் உயிரிழப்பு!!

 
வீரபத்திரன்

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பகுதியில் வசித்து வருபவர் வீரபத்திரன். இவருடைய மகன் வெங்கடேஷ் (21). இரவு நேரத்தில் அவரது கிராமப்பகுதியில் மின்சார லைன் மாற்றிய பிறகு வெங்கடேஷ் தனது பருத்தி வயலுக்கு நீர்ப்பாய்ச்சுவதற்காக வீட்டை விட்டு கிளம்பினார். ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று அவரது வயல்பகுதிக்கு அவர் செல்வது வழக்கம்.

இரவு நேரத்தில் வெங்கடேஷ் தன்னுடைய செல்போனில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு இசையை ரசித்தபடியே தண்டவாளத்தைக் கடந்து சென்றார். அப்போது மன்னையில் இருந்து  சென்னைக்கு செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தது.

திருவள்ளூர்

வெங்கடேஷ் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதை பார்த்த ரெயில் ஓட்டுனர் பலமாக ஹார்ன் அடித்தார். ஆனால் அவர் தனது 2 காதுகளிலும் ஹெட்செட் போட்டபடி நடந்து சென்றதால், ரெயில் வரும் சத்தம் கேட்காமல் போனது. யாரும் எதிர்பார்க்காமல் கண் இமைக்கும் நேரத்தில் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளைஞர் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேஷ் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.சமீப காலமாக ஹெட்செட் மாட்டிக் கொண்ட சிலர் சாலையை கடக்கும் போதும், வாகனத்தை ஒட்டும் போதும் விபத்துகள் நேர்வது வழக்கமாகிவிட்டது வேதனைக்குரிய விஷயமாகும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web