விபத்தில் சிக்கிய அதிமுக பொதுக்குழு வேன்!! 15 பேர் படுகாயம்!!

 
அதிமுக வேன்

தமிழகத்தில் இன்று சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இதில்  கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் சென்னைக்கு வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர். அந்த வகையில்  திருவண்ணாமலை மாவட்டத்தில்  வந்தவாசி உளுந்தை கிராமத்தில் வசித்து வரும்  15க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வேனில் இன்று காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

விபத்து
இந்த வேன் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இரட்டை ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது மோதியது.இந்த விபத்தில் லாரியின் டிரைவர், உடன் இருந்த 2 பேர் மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்தவர்களில்  4 பேர் மற்றும் சென்னை வானகத்தில் நடைபெறும் அதிமுக பொது குழுவில் கலந்து கொள்ள வேனில் சென்ற அதிமுகவினர் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மேல்மருவத்தூர்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேல்மருவத்தூர்  காவல்துறையினர் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web