நடிகர் அர்ணவ் நேரில் ஆஜராஜ உத்தரவு!! சின்னத்திரை நடிகை புகார் எதிரொலி!!

 
திவ்யா

பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா. இவரது கணவர் நடிகர் அர்ணவ் மீது தனது மனைவி திவ்யா மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் விசாரணை நடத்த  நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அக்டோபர் 14ம் தேதி  ஆஜராகும்படி போலீசார் சம்மன் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்ணவ்
சின்னத்திரை நடிகையான திவ்யா, தனது கணவரும் சின்னத்திரை நடிகருமான அர்ணவ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். 'செவ்வந்தி' தொடரில் நடிகை திவ்யா கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார். இவருக்கும், ‘செல்லம்மா’ தொடரின் கதாநாயகனான நடிகர் அர்ணவுக்கும் ஏற்கனவே ஒரு தொடரில் நடித்ததன் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அவர்களின் பழக்கம் காதலாக மாறி இருவரும் ஒரே வீட்டில் 2 வருடங்களாக சேர்ந்து வசித்து வந்த நிலையில் திருமணமும் செய்து கொண்டனர். அதன் பின்னர் திவ்யா கர்ப்பிணியானதை தொடர்ந்து அர்ணவ், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் எனவும்  திவ்யா குற்றம் சாட்டினார்.

திவ்யா
இந்நிலையில்  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா, கணவர் அர்ணவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2 வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து, நடிகர் அர்ணவும் தனது தரப்பில் போலீசில் புகார் அளித்தார்.இந்நிலையில் நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்ணவ் நாளை மறுநாள் நேரில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று போரூர் அனைத்து மகளிர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!w

From around the web