நடிகர் காரியவட்டம் சசிகுமார் திடீர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

 
காரியவட்டம் சசிகுமார்

பிரபல மலையாள நடிகர் காரியவட்டம் சிவக்குமார் உடல்நலன் குன்றிய நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலமானார். அவரது  மறைவுக்கு மலையாள திரையுலகைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான 'கிரைம் பிராஞ்ச்' படத்தின் மூலம் அறிமுகமானார் காரியவட்டம் சசிகுமார். அதனைத் தொடர்ந்து, கவைரான், தீர்ப்பு, மிமிக்ஸ் அணிவகுப்பு, அபயம், தேவாசுரம், செங்கோல், அடியாதே கண்மணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

விஜயகிருஷ்ணன் இயக்கிய 'மயூரநர்த்தம்' படத்தில் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைக்கு நிதி சேர்க்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்தார். 

காரியவட்டம் சசிகுமார்

இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு குறித்து நடிகை சீமா ஜி நாயர் கூறுகையில், பிரணாம்.. திரைப்பட சீரியல் நடிகரும்.. திட்ட ஒருங்கிணைப்பாளருமான காரியவட்டம் சசி சேத்தன் காலமானார். திடீரென ஏற்பட்ட  உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எல்லோரிடமும் அன்பாக பழகியவர்.. என்ன செய்தாலும் பாராட்டிக் கொண்டே இருப்பவர். ஏட்டனுக்கு உடல்நிலை சரியில்லை என்று மனோஜிடம் இருந்து போன் வந்ததும் கட்டப்பனாவில் இருந்தேன். 

காதலர்கள் தற்கொலை

சேத்தனின் சிகிச்சைக்கு பணம் சேகரிக்கும் முயற்சியில் இருந்தேன். அதுக்காக நேற்றே பதிவுகள் ஆரம்பமாகி விட்டன. யாருடைய உதவிக்கும் காத்திராமல் பலருக்கும் உதவியாக இருந்த சேத்தன் கிளம்பிச் சென்றார். என்ன சொல்வது? ஒன்றும் சொல்வதற்கில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web