நடிகர் பிரதாப் போத்தனின் கடைசி பதிவு! மரணம் பற்றி வைரலாகும் வார்த்தைகள்!

 
பிரதாப் போத்தன்

நடிகர் இயக்குநர் பிரதாப் போத்தன் நேற்று காலை மரணமடைந்த நிலையில், தான் இறப்பதற்கு முதல் நாளில், முகநூலில் அவரது பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன. குறிப்பாக மரணம் பற்றிய நடிகர் பிரதாப் போத்தனின் கடைசி பதிவை, அவரது ரசிகர்கள் ஷேர் செய்து கண் கலங்குகிறார்கள்.

பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்  நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், 12 படங்களை இயக்கியும் உள்ள பிரதாப் போத்தன், தான் நடித்த இயக்கிய படங்களுக்காக தேசிய விருது உள்ளிட்ட பிற விருதுகளையும் வென்றுள்ளார். 

இந்நிலையில் இறப்பதற்கு முதல் நாள் இரவு, அவரது பேஸ்புக் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். காதல், அன்பு, மரணம் உள்ளிட்ட விஷயங்களை பற்றி பிரபல எழுத்தாளர்களின் மேற்கோள்களை காட்டி பதிவு செய்துள்ளார். ஒரு பதிவில் ஜார்ஜ் என்பவரின் மேற்கோளை காட்டி, ''மரணம் என்பது நாம் தினந்தோறும் எச்சில் விழுங்குவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு, ‘நாம் எச்சிலை முழுக்காமல் துப்பிக் கொண்டிருந்தால்,  மரணம் நம்மை அணுகாது’ என ரசிகர் ஒருவர் பின்னூட்டம் போட்டத்திற்கு ஸ்மைலி செய்திருக்கிறார் பிரதாப் போத்தன்.  காதல், அன்பு, மரணம் உள்ளிட்ட விஷயங்களை பற்றி பிரபல எழுத்தாளர்களின் மேற்கோள்களை காட்டி நடிகர் பிரதாப் போத்தன், தான் இறப்பதற்கு முதல் நாள் இரவு, அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

 

மற்றொரு பதிவில், ''நீங்கள் ஒரு நோயின் காரணத்தை, ஆணிவேரை குணப்படுத்தாமல் அதன் அறிகுறிகளை குணப்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் கடைசி வரை மருத்துவமனையை நம்பித் தான் இருக்க வேண்டும்'' என பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ''சிலர் அதிகமாக அக்கறை காட்டுவார்கள். என்னை பொறுத்தவரை அதை காதல் என்பேன்'', '' வாழ்க்கை என்பது கடைசி வரை கட்டணங்களை செலுத்தியே கழிந்து விடும்'' என தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web