நடிகர் விஷால் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல்! போலீசில் புகார்!

 
விஷால் வீடு

காய்த்த மரம் தான் கல்லடிபடும் என்பது எல்லாம் பழைய மொழி. காலியாக இருக்கிற மரம் கூட கல்லடி படும் என்பது விஷால் கதையில் உண்மையாகி வருகிறது.
ஜப்தி அறிக்கை, மஞ்சள் நோட்டீஸ் ரேஞ்சுக்கு நீதிமன்றத்தில், விஷாலிடம் அறிக்கை கேட்டு, கொரோனா காலம்... வருமானம் கிடையாது.. பார்த்து பண்ணுங்க என விஷால் தரப்பும் சொல்லி, வழக்கு சென்று கொண்டிருக்கிறது.

நடித்த படங்களும் ரிலீஸுக்கு தவிக்க, ஒரு பெரிய ஹிட் கிடைக்கலைன்னா சினிமா வாழ்க்கையையே காலி பண்ணிடுவாங்க என்கிற தெளிவோடு தான் விஷாலும் இருக்கிறார். 2004ம் ஆண்டு வெளியான 'செல்லமே' படம் மூலமாக அறிமுகமானா விஷாலுக்கு, அதனைத் தொடர்ண்ட் ஹு சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, அவன் இவன், துப்பறிவாளன் என தொடர்ந்து ஹிட் கிடைச்சாலும், நடிகர் சங்கம், காதல், வரலட்சுமியுடன் நட்பு, சண்டை, நிச்சயதார்த்தம், ஆர்.கே. நகரில் போட்டி, பின்பு திருமணம் நின்று போவது என ஏகப்பட்ட அக்கப்போர்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

விஷால்

சொந்த தயாரிப்பு பணிகளும் கையைச் சுட, இயக்குநர் மிஷ்கினுடனான மோதல், விஷாலை அதள பாதாளத்துக்கு குப்புற தள்ளியது. இந்நிலையில், படத் தயாரிப்பு தொடர்பாக லைக்கா நிறுவனத்துக்கும், விஷாலுக்குமிடையே  கொடுக்கல் வாங்கல் பிரச்சனை உள்ளது. அவரது அலுவலகத்தில் வேலைப் பார்த்த ஒருவர் பணம் கையாடல் சம்பந்தமாக புகார் உள்ளது. 

விஷால் சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டருகில் காரில் வந்த சில மர்ம நபர்கள் வீட்டின் மீது கற்களை வீசினர். இதில் விஷால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். 

ஓ.டி.டி.யில் ரிலீசுக்கு தயாராகும் விஷால் படம்?

இது குறித்து விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன், அண்ணாநகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். விஷால் வீட்டுக்கு வந்த மர்ம ஷிப்ட் கார் யாருடையது என விசாரித்து வருகிறார்கள். கல் வீச்சு சம்பவம் நடைபெற்றபோது, நடிகர் விஷால் வெளியூரில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கோலிவுட் வட்டராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?!

From around the web