நடிகை ரோஜா குடும்பத்துடன் தமிழகத்தில் குலதெய்வ வழிபாடு!!

 
ரோஜா

தமிழ் திரையுலகில் முன்னாள் கதாநாயகியும் ஆந்திராவின் இந்நாள் அமைச்சருமான நடிகை  ரோஜவின் குலதெய்வம் தமிழகத்தில் உள்ளது. இந்த கோவில் உத்திரமேரூரை அடுத்த திருமுக்கூடல் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு  தனது கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி மற்றும் குடும்பத்துடன் இணைந்து தமிழகத்தில் உள்ள தனது குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்தினார். 

ரோஜா
 அங்கு பிரசித்தி பெற்ற கோவிலான ஸ்ரீ  செல்வி அம்மன் ஆலயத்திற்கு ஆந்திர அமைச்சரும் திரைப்பட நடிகையுமான ரோஜா, கணவர் செல்வமணியுடன் சென்று அங்குள்ளவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.அதன் பின்னர் கோவிலில் செல்வ அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து இருவரும் பக்திப் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரோஜா
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமயிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவராக ரோஜா திகழ்வதோடு, தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஆர்.கே.செல்வமணியும், நடிகை ரோஜாவும் அந்த ஊர் மக்களை சந்தித்து மகிழ்ந்து உரையாடினார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web