இன்று நாள் முழுவதும் ஒத்தி வைப்பு!! சட்டப்பேரவை மழைக் கால கூட்டத்தொடர்!!
தமிழகத்தில் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க.வின் உள்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் முதல் நாள் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலான எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.
முதல் நாள் சட்டப்பேரவை நடவடிக்கையில் மறைந்த உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதை முன்னிட்டு 2 மணி துளிகள் சபை உறுப்பினர்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
மேலும் 2ம் நாள் மழைக்கால கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு கூடும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!