அதிசய ஆச்சரியம்!! ஐந்து விரல்களுடன் கை போல் விற்பனைக்கு வந்த முள்ளங்கி!!

 
முள்ளங்கி

தமிழகத்தில் சில நேரங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள்  வித்தியாசமான வடிவத்தில் வளர்வது ஆச்சரியத்தை ஏற்படுத்துவது வழக்கம். அதிலும் சில மனிதனை போன்றும் மனிதனின் உடல் பாகங்கள் போன்றும் காட்சியளிப்பது அதை விளைய செய்த விவசாயிக்கோ அல்லது விற்பனைக்கு கொண்டு வரும் வியாபாரிக்கோ பெயர் வாங்கிக் கொடுத்துவிடுகிறது என்றே சொல்ல வேண்டும்.

முள்ளங்கி

அதே போன்று வாழப்பாடி தினசரி சந்தைக்கு காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். அதன்படி வியாபாரி தான் கொண்டு விற்பனைக்கு கொண்டு வந்த முள்ளங்கி ஒன்று, மனிதனின் கைகளை போன்றும் அதில் 5 விரல்கள் இருப்பது போன்றும் காட்சியளித்ததால் ஆச்சரியம் ஏற்பட்டது. 


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, துக்கியாம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவர் தனது விவசாய நிலத்தில் முள்ளங்கி பயிரிட்டுள்ளார். மண்ணுக்கு கீழ் விளையும் முள்ளங்கி எவ்வாறு வளர்ந்துள்ளது? எந்த வடிவத்தில் வளர்ந்துள்ளது என்பது அறுவடைக்கு பின்னரே தெரியவரும்.

சேலம்

அதன்படி வெங்கடேஷ் தான் அறுவடை செய்த முள்ளங்கிகளை வாழப்பாடி தினசரி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தார். அதில் இருந்த முள்ளங்கி ஒன்று, 5 விரல்கள் கொண்ட மனிதர்களின் கைகளைப் போல காட்சியளித்தது. இதை அங்கிருந்த விவசாயிகளும், நுகர்வோர்களும், பொதுமக்களும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web