மேலும் ஒரு மாணவர் 3 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!! கல்லூரிகளில் தொடரும் சோகம்!!

 
தீனா

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள சைராபாத் பகுதியைச் சேர்ந்தவர் தீனா (23). ஐஐஐடிஎம்மில் 3-ம் ஆண்டு படித்து வந்த இவர் அப்பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். படிப்பில் சிறந்த விளங்கிய மாணவன் தீனா தன்னுடைய முயற்சியால் யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கினார்.

தீனா

அதில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இவர் உருவாக்கிய யூடியூப் சேனலுக்கு அவர் எதிர்பார்த்த அளவிற்கு போதிய வரவேற்பு இல்லை.இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்ட தீனா, நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டின் 5-வது மாடிக்குச் சென்ற தீனா அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தற்கொலை
இதுகுறித்து தகவல் அறிந்த ஐராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web