ஸ்ரீமதி வழக்கில் வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது!!
வாட்ஸ் அப் குழுவில் மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து பல்வேறு வதந்திகளை பரப்பி சட்டம்& ஒழுங்கை சீர் குலைக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 13ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்மட் சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்று வந்த பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி பள்ளி வளாகத்தின் 3வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாணவியின் மரணம் குறித்து தமிழக சட்டம்& ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இது குறித்து பொது மக்கள் வன்முறை செயல்களில் ஈடுபட்டனர். அதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு பலர் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இதனை தமிழக அரசு மற்றும் காவல்துறை வன்மையாக கண்டித்தது. மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்துள்ள ஜிடிஎன் கலைக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவன் உதயகுமார், பார்வதி கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மற்றொரு கல்லூரி மாணவன் ஆகியோர் வாட்ஸ் அப்பில் ‘ஜஸ்டிஸ் ஸ்ரீமதி’ என்ற புதிய குழு ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இந்த வாட்ஸ் அப் குருப்பில் மாணவி ஸ்ரீமதியின் புகைப்படத்தை பதிவிட்டு, பல்வேறு வகையான வதந்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது. மாணவி மரணத்தால் எழுந்த வன்முறை மற்றும் போராட்டங்கள் குறித்தும் பல்வேறு வதந்திகளை பகிர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரும் பெரிய அளவில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். இது தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் தகவல் அறிந்து கல்லூரி மாணவர்கள் உதயகுமார் மற்றும் இன்னொரு மாணவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!