அதிர்ச்சி! டெங்கு காய்ச்சலுக்கு பெண் மருத்துவர் பலி!

 
தனுஷியா

டெங்கு காய்ச்சலுக்கு பல் மருத்துவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களே ரொம்ப கவனமா, பாதுகாப்ப இருங்க. மழைக்காலம் ஆரம்பிச்சுடுச்சு. புதுச்சேரி மாநிலம் மடுகரை வி.எஸ்.நகர் 3-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் குமார். இவரது மகள் தனுஷியா (25). பல் மருத்துவரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஸ்ரீராம் (28) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இருவரும் சென்னை அண்ணா நகர் பகுதியில் தங்கி தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக காய்ச்சல் அவதிப்பட்டு வந்த நிலையில், ரத்த பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது.

உஷார்!கொரோனாவை அடுத்து வரும் டெங்கு, ஜிகா வைரஸ்கள்! இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு தீவிரம் !!

இந்நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த தனுஷியா, ஓய்வு எடுப்பதற்காக, மடுகரையில் உள்ள தாய் வீட்டிற்கு நேற்று முன் தினம் வந்தார். அப்போது திடீரென தனுஷியாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

உஷார்! அதிகரிக்கும் டெங்கு ! நிரம்பி வழியும் வார்டுகள்!

அன்று இரவு 8 மணியளவில் மீண்டும் தனுஷியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அதே மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தனுஷியாவிற்கு திடீரென ரத்த அணுக்கள் குறைந்ததால், அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மடுகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web