BIG NEWS!! அக்னிபாத் திட்டத்தில் விமானப்படையில் சேர ஜூன் 24ல் விண்ணப்பங்கள் வெளியீடு!!

 
விமானப்படை

இந்தியாவில்  முப்படைகளில் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அக்னிபாத் திட்டத்தை அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கான தகுதிகள், விதிகள், நிபந்தனைகள்  குறித்த அறிவிப்பு ராணுவத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதில் பொதுப்பணி, தொழில்நுட்பம், கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் பிரிவினருக்கான முன்பதிவு ஜூலையில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அக்னிபாத்
மேலும் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன்  24ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அத்துடன் இதற்கான ஆன்லைன் தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என  இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. careerindianairforce.cdac.in என்ற அதிகாரப்பூர்வ இந்திய விமானப்படை இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம் .
அதே நேரத்தில் ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு நீடித்து வருகிறது. மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களை சேர்க்கும் பணிகளில் முப்படைகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதே போல் கடற்படை மற்றும் விமானப்படையில் ஆள்சேர்ப்புக்கான அறிவிப்புகளும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முப்படை தளபதிகள்
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ், ஜூலை 24ம் தேதியில் இருந்து ஆன்லைன் தேர்வு நடைபெறும் என விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியவும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேரவும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 24 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை விமானப் படை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விமானப் படையில் சேர்வதற்கு, https://indianairforce.nic.in/ அல்லது https://www.careerindianairforce.cdac.in/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.

ஜூன் 24ம் தேதி காலை 10 மணி முதல், ஜூலை 5ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய விரும்புபவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2 ஆண்டுகள் தொழில்சார்ந்த படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் அல்லது தொழில்சார்ந்த படிப்பல்லாத இரண்டு ஆண்டு ஆங்கிலம், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இணைத்து அத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.250ஐ செலுத்த வேண்டும். 1999,29 டிசம்பர் முதல் 2005ம் ஆண்டு ஜூன் 2ம் தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணபிக்க தகுதியானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web