BIG NEWS!! பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி!! அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!!

 
கல்லூரி பெண்கள் யுஜிசி

சமீப காலமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் அத்துமீறல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உடனடியாக உயர் மட்ட கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று யுஜிசி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியைகள், மாணவிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுத்து அதற்கு சரியான தீர்வு காண வேண்டும் எனவும் யுஜிசி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

கல்லூரி மாணவிகள்

இது குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பாலின அடிப்படையிலான வன்முறைகள் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் நடைபெறுவதை தடுக்கவும் கையாள்வதற்கும் உயர்மட்ட கமிட்டியை உடனடியாக அந்தந்த கல்வி நிர்வாகம் அமைக்க வேண்டும். மேலும் அங்கு பணிபுரியும் பேராசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்கள், மாணவிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கான விதிமுறைகள் 2015ன் படி செயல்படுகிறது என்பதை தணிக்கையின் ஆன்லைன் புகார்களை நிரப்பவும், அனைத்து கல்லூரிகளையும், பல்கலைக்கழங்களையும் வலியுறுத்தியுள்ளது.

மாணவிகள்

இந்த உயர் மட்ட கமிட்டி அமைக்கப்படும் பட்சத்தில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறைவதற்கும், உடனடி தீர்வுக்கும் வழிவகுக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. மேலும் புகார் கொடுக்கும் மாணவிகளின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web