BREAKING!! அடுத்த அதிர்ச்சி!! இன்று முதல் ஆவின் பொருட்களின் விலை உயர்வு!!

 
ஆவின்

ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.உணவுப்பொருட்கள் மீது 5 சதவீதம் வரை ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு இருப்பதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆவின் பொருட்களின் தயாரிப்பான தயிர், மோர், லஸ்சி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை அந்த நிறுவனம் அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது.

கோயில்களில்  இனி ஆவின் மட்டுமே !!தமிழக அரசு அதிரடி!!

இந்த விலை உயர்வு இன்று (21ம் தேதி) முதல் அமலுக்கு வரும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்யின் விலை கூடுதலாக ரூ.50 என்ற அளவிலும், 1 லிட்டர் தயிரின் விலை கூடுதலாக ரூ.10ம் உயர்த்தப்பட்டுள்ளது என பால் முகவர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.


மேலும் ரூ.25க்கு விற்கப்பட்டு வரும் 200 கிராம் தயிரின் விலை ரூ..28 ஆக அதிகரித்துள்ளது. 100 கிராம் தயிர் ரூ.10 லிருந்து 12 ரூபாயாகவும், 1 கிலோ எடை கொண்ட தயிர் பாக்கெட் ரூ.100ல் இருந்து ரூ.120 ஆகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 500 கிராம் ஆவின் தயிர் ரூ.35க்கு விற்கப்படுகிறது. 

கலர் கலரா அசத்தல் ஆவின் ஸ்வீட்ஸ்  அறிமுகம்!

மக்கள் அதிகளவு விரும்பி வாங்கும் 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.535ல் இருந்து ரூ.580 ஆகவும், 500 மி.லி. ஆவின் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஆவின் பொருட்களின் விலை உயர்வு குறித்து மக்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web