பகீர்!! 45 துப்பாக்கிகள் பறிமுதல்!! சர்வதேச விமானநிலையத்தில் கடத்தல்!!

 
துப்பாக்கி

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வியட்நாமில் இருந்து தம்பதியர் வந்திறங்கினர். சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பேரில் தம்பதியரின் உடமைகளை பரிசோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த டிராலி பேக்கில் 45 கடத்தல் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இந்திரா காந்தி விமான நிலையம்

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்தவர்களை போலீசார் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.45 கடத்தல்  துப்பாக்கிகளை வைத்திருந்த தம்பதியரிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அதில் அவர்களின் பெயர் ஜெகத்ஜித்சிங் மற்றும் அவரது மனைவி ஜஸ்வீந்தர் கவுர் என்பது தெரிய வந்தது.

knife airport விமான நிலையம் கத்தி விமானநிலையம் உள்ளூர்

அவர்களிடம் இருந்து 45 துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.22 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பறிமுதல் செய்யப்பட்ட துப்பாகிகளின் உண்மை நிலை குறித்து விசாரணைக்கு பிறகு தான் தெரிய வரும். மேலும் முதல்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளது’’ என்று கூறினர்.சர்வதேச விமான நிலையத்தில் அச்சுறுத்தும் வகையில் 45 துப்பாக்கிகள் கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web