பகீர்!! 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!! பள்ளிகளில் தொடரும் அவலம்!!!
சென்னையை அடுத்த படப்பை ராகவேந்திராபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். திருமணமான இவருக்கு 3 வயதில் மகள் இருக்கிறாள். சிறுமி அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார்.சிறுமி வழக்கம் போல் பள்ளியில் இருந்து மாலை நேரம் வீடு திரும்பி உள்ளார். அப்போது சிறுமியின் உடலில் பல இடங்களில் காயம் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுமியிடம் நடந்தவற்றை கூறும்படி பொறுமையாக கேட்டனர். அப்போது சிறுமி அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறியுள்ளார்.
தான் படிக்கும் பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக சிறுமி கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.சிறுமி படித்து வரும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் தமிழரசு. இவர் சிறுமியை பாலியல் ரீதியான வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து உடற்கல்வி ஆசிரியர் தமிழரசு மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தமிழரசு சிறையில் அடைக்கப்பட்டார்.
3 வயது சிறுமிக்கு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பாலியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாட வேண்டும். மேலும் தங்கள் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!