பகீர்! ஓடும் காரில் தோழியைக் கற்பழித்த 3 நண்பர்கள்! அடுத்த நாள் நடுரோட்டில் இறக்கி விட்ட கொடூரம்! தலைநகரில் தொடரும் நிர்பயா அவலம்!

 
டெல்லி கார்

தங்களது நெருங்கிய தோழியை, நயமாக பேசி, காரில் ஏற்றிக் கொண்டு, குளிர் பானத்தில் மதுவைக் கலந்து குடிக்கச் செய்து, மயக்க நிலையை அடைந்ததும் ஓடும் காரில் நண்பர்கள் 3 பேரும் தோழியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது நாட்டையே அதிர செய்துள்ளது.  தலைநகர் டெல்லியில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ள நிலையில், வருடங்கள் பல கடந்தாலும் தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர். அந்த 3 இளைஞர்களையும் டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

டெல்லியில் ஓடும் பேருந்தில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்காரம் நாட்டையே உலுக்கியது. பல வருடங்களாக நடைப்பெற்ற அந்த வழக்கில், இறுதியில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதே போன்றதொரு கொடூர சம்பவம் மீண்டும் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

டெல்லியில் கடந்த 6ம் தேதி 16 வயது சிறுமி ஒருவர் தனது 3 நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். இளம் பெண்ணுக்கு வயது 16. அப்போது நண்பர்கள் கொடுத்த மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அருந்திய சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து நள்ளிரவில் ஓடும் காரில் நண்பர்கள் 3 பேரும் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் 7ம் தேதி சிறுமியை அவரது வீட்டின் அருகே இறக்கவிட்டு விட்டு, இது குறித்து குடும்பத்திடமோ, போலீசாரிடமோ கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டில் விட்டு மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டார்கள்.

இருப்பினும் சிறுமி தனது தந்தையிடம் நடந்த அனைத்தையும் மறைக்காமல் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு துடித்து போன தந்தை, சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, பின்னர் இது குறித்து புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமி கூறிய தகவலை வைத்து கார் பயணித்த அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர். மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

குடும்ப வன்முறை பெண்கள் பாலியல் பலாத்காரம்

இந்நிலையில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் பலனாக சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் கைது செய்தனர். குற்றம் நடந்த காரையும் பறிமுதல் செய்தனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 3 பேரிடமும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நட்பு என்ற போர்வையில் ஓடும் காரில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம் குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்களுக்கு இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web