பகீர்! மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர் வெட்டிக் கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்!

 
ரெதீஸ்

கன்னியாகுமரியில் இஎஸ்ஐ மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று, அங்கிருந்த மருத்துவமனை ஊழியரை தாக்கி, திடீரென்று சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தில் அரசு இஎஸ்ஐ மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனைக்குள் திடீரென்று மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக நுழைந்தது. அங்கு பணியில் இருந்த ரெதீஸ் என்ற ஊழியரை கண் இமைக்கும் நேரத்தில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

கன்னியாகுமரி
இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ந்து போய் கூச்சலிட்டார்கள்.  மேலும் இந்த கொலை மருத்துவமனையில் சக  பணியாளர்களின் கண்முன்பே நடந்ததால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.  கொலை குறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் மீனா தலைமையிலான போலீசார் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். படுகொலை செய்யப்பட்ட ஊழியர் ரெதீசுக்கு யாருடனாவது முன்பகை இருந்ததா? இல்லை வேறு ஏதேனும் பிரச்சினையா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
 போலீஸ் க்ரைம் கொலை தற்கொலை
இதே போன்றதொரு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், நசரேத்தில் நடைபெற்றது. மின்வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்த ஆனந்த பாண்டி (51) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது  குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web