பகீர்! 10ம் வகுப்பு மாணவனின் முகப்பருவை ஊசியால் அகற்றிய ஆசிரியை! அநியாயமாக உயிரை இழந்த சோகம்!

 
முகப்பரு

மக்களே உஷாராக இருங்க.. நீங்களாகவே கூகுள் டாக்டராக உருவெடுக்காதீங்க. தன்னுடைய முகத்தில் அரும்பிய முகப் பருக்களை ஊசிவை வைத்து அகற்றியதால் 10ம் வகுப்பு  படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை, செங்கம் பகுதியில் வசித்து வருபவர் சேவத்தான். இவரது மகன் அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி பள்ளியின் ஆசிரியை மகாலட்சுமி, மாணவனின் தந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

திருவண்ணாமலை

மாணவனின் முகம் அதிகளவில் வீங்கி உள்ளதாகவும், உடனே பள்ளிக்கு வந்து மாணவனை அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்டும் படி கூறியுள்ளார். ஆசிரியையின் தொலைபேசி தகவலையடுத்து, உடனடியாக பள்ளிக்கு விரைந்து சென்ற தந்தை, தனது மகனிடம் நடந்த விஷயங்கள் குறித்தும், முகம் திடீரென வீங்கி போயிருக்கும் காரணத்தையும் விசாரித்த போது, ஆசிரியை மகாலட்சுமி தனது முகத்தில் இருந்து பருவை ஊசியால் குத்தி விட்டதாக சிறுவன் கூறினான்.

boy

முகம் முழுவதும் அதிகளவில் வீங்கியிருந்ததால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதனைத் தொடர்ந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web