உருதுக்கு தடை! மசூதிகளை தோண்டுவோம்! பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு! அண்ணாமலை பப்ளிசிட்டி எல்லாம் வேஸ்ட்!

 
பண்டி சஞ்சய் குமார்

ஒரு காலத்தில் மக்கள் நலனுக்காக அரசியல் தலைவர்கள் யோசித்தார்கள். ஒவ்வொரு செயலிலும் மக்கள் நலன் அவர்களின் சிந்தனையில் பிரதானமாக இருந்தது.. என்றெல்லாம் பள்ளி பாடங்களில் படித்து, வளர்ந்த தலைமுறை இது. இன்று 45.. 50 வயதைக் கடந்தவர்கள் இந்தியா முழுவதுமே இப்படி படித்து தான் வந்திருக்கிறார்கள். இதற்கு, இன்று ஆளும், எதிர்கட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் துவங்கி, லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் வரை யாருமே விதிவிலக்கு கிடையாது. ஆனால், பதவிகள் அமர்ந்திருப்பவர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் கவனத்தை ஈர்க்கவும், ‘ஏய்... நானும் ரெளடி தான்’ என்று குரல் எழுப்புவது இந்தியா முழுவதுமே பாரபட்சமில்லாமல் இருக்கும் போல.

நேற்று முழுக்க தமிழகத்தில் பாஜக அண்ணாமலை, செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேச்சு அந்த ரகம் என்றால்.. தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் பேச்சு இன்னும் அதகளம். ராமராஜ்ஜியம் உருவானால் உருதுமொழி தடை செய்யப்படும் என்று பேசியிருக்கிறார் தெலுங்கான மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார். இத்தனைக்கும் இவர் தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மக்களவை தொகுதி எம்பியாக பொறுப்பான பதவியில் இருப்பவர் பண்டி சஞ்சய் குமார். இவர் தெலுங்கானா மாநில பாஜக தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

மோடி

இந்நிலையில், கரீம்நகரில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற யாத்திரையில் பண்டி சஞ்சய் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது, “இந்தியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு மதராக்களே காரணம். பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக மதரசாக்கள் செயல்படுகிறது. மசூதி வளாகங்களில் எங்கு தோண்டினாலும் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. எனவே சட்டவிரோத செயல்களை மேற்கொள்பவர்களை அடையாளம் கண்டு களைய வேண்டும்.

மசூதி வளாகங்களை தோண்டி பார்த்தால் சிவலிங்கங்கள் தான் இருக்கின்றன. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகளையும் தோண்டி ஆய்வு செய்ய வேண்டும். அதில், சிவலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த மசூதிகளை முஸ்லிம்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஏதேனும் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டால் அந்த இடத்தின் உரிமையை முஸ்லிம்கள் கோரலாம். 

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும். தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, உருது மொழிக்கு தடை விதிக்கப்படும். 'ராம ராஜ்ஜியம்' வந்தால் உருது மொழியை முற்றிலும் தடை செய்வோம்” என்று பேசினார். இவரின் இத்தகைய பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவர் பேசுகிற பேச்சைப் பார்த்தால், தமிழகத்தில் அண்ணாமலை அடிக்கிற பப்ளிசிட்டி எல்லாம் கம்மி தான் போல.. இன்னும் நம்ம தலைமுறையில் என்னவெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறதோ?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web