ரூ3.28 கோடியை சுருட்டிய வங்கி ஊழியர்கள்!! திடுக்கிடும் பகீர் பிண்ணனி!!

 
பாங்க் ஆப் பரோடா

கோவை நஞ்சப்பா ரோட்டில் பேங்க் ஆப் பரோடா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக அனுப்பப்பட்ட பணத்துடன் ரூ.98 லட்சம் கள்ளநோட்டுகளை வாங்கி அதிகாரிகளே சேர்த்து வைத்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 

கோவை

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சேதமடைந்த ரூ. 1.85 கோடி பணத்தை பண பெட்டக வைப்பு அறைக்கு அனுப்பாமல் கையாடல் செய்ததும் அம்பலமானது. பழைய நோட்டுகளுடன் சேதமடைந்த 54,700 ரூபாயை வைத்ததும் தெரியவந்தது. பண வைப்பு அறையில் ரூ. 1.06 கோடிக்கு கள்ள நோட்டுகளை வைத்து 46 லட்சத்தை வங்கி அதிகாரிகள் கையாடல் செய்ததும் தெரியவந்துள்ளது. 

வங்கி வைப்பு அறையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் ரூ. 3.28 கோடி சுருட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடிக்கு வங்கி காவலாளி கனகராஜ், அலுவலக உதவியாளர் ஸ்ரீகாந்த் உதவியதும் அம்பலமாகியுள்ளது.

கைது

இந்தப் புகார் சென்னை சிபிஐ வங்கி மோசடி தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், மோசடியில் சம்மந்தப்பட்ட பேங்க் ஆஃப் பரோடா வங்கி அதிகாரிகள் செல்வராஜன், ராஜன், ஜெய்சங்கரின் உள்பட 6 பேர் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அலுவலக உதவியாளர் ஸ்ரீகாந்த், எஸ்.பி.ஐ. உள்பட மேலும் 4 வங்கிகளில் கணக்கு வைத்துள்ளதால் வங்கியில் சுருட்டிய பணம் வேறு வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web