உஷார்! வீட்டிலிருந்த டிவி விழுந்து 2 வயது குழந்தை பலி!

 
பலி

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது, டி.வி. விழுந்து குழந்தை பலியான சம்பவம் திருத்தணியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முஸ்லிம் நகர் பகுதியில் வசித்து வருபவர் சதாம் உசேன். இவருக்கு 2 வயதில் சூபியன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் இவர் தனது குடும்பத்தாருடன் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் குழந்தை சூபியன் டிவி வைத்திருந்த ஸ்டாண்டை பிடித்து விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்கவே அலறி அடித்துக் கொண்டு உள்ளே வந்து பார்த்த போது குழந்தையின் தலையில் டிவி விழுந்திருப்பதை கண்டு சாதம் உசேன் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக குழந்தையை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திருத்தணி

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இரண்டு வயது குழந்தை மீது டிவி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதலர்கள் தற்கொலை

சமீப காலமாக குழந்தைகள் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்து உயிரிழப்பு, மாடியில் இருந்து விழுந்து குழந்தை உயிரிழப்பு, சாம்பாரில் விழுந்து குழந்தை உயிரிழப்பு, விசில் விழுங்கி குழந்தை உயிரிழப்பு இப்படி இந்த வாரத்தில் மட்டும் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம்

From around the web