நாட்டு வெடி தொழிற்சாலையில் பெரும்விபத்து!! 4 பேர் பலி!!
கடலூர் மாவட்டம் எம். புதூர் அருகே ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை அவருடைய மருமகன் மோகன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இதில் 7 பேர் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். பின்னர் இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வருவாய்த்துறை மற்றும் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!