ஆட்டோவின் மீது அறுந்து விழுந்த மின்கம்பியால் பெரும் தீவிபத்து!! 8 பேர் உடல் கருகி பலி!!
ஆந்திராவில் ஆட்டோ மீது உயர் மின் அழுத்த கம்பி விழுந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தடிமரி பகுதியில் உள்ள சிலகொண்டையா பல்லி கிராமத்தை சேர்ந்த 11 பேர் விவசாய பணிக்காக ஆட்டோவில் இன்று காலை சென்றுகொண்டிருந்தனர்.
ஆட்டோ கிராமத்தை தாண்டி சென்று கொண்டிருந்தபோது , எதிர்பாராதவிதமாக மேலே சென்றுகொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பி அறுந்து ஆட்டோ மீது விழுந்துள்ளது. இதனால், ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்ததோடு உடனடியாக ஆட்டோ தீப்பற்றி எரிந்தது. அப்போது ஆட்டோவில் இருந்த மூவர் மட்டும் தப்பித்த நிலையில் மற்றவர்கள் இறக்க முயற்சித்தபோது தீ வேகமாக பரவியதால் பயணிகள் ஆட்டோவிற்குள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
இந்த தீ விபத்தில் ஆட்டோவில் பயணித்த 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும், மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!