4 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை !! வெளில போனா குடை எடுத்திட்டு போங்க!!

 
மழை


தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து  சென்னை வானிலை மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ‘இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மழை
மேலும் தமிழக கடலோரப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதன் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிமீ வரையில் இருக்கும் என்று கணித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடி மின்னல் மழை

மத்திய அரபிக்கடல், கிழக்கு மகாராஷ்டிரா மற்றும் கோவா கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 கி.மீட்டர் முதல் 50 கி.மீட்டர் வரையில் வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web