மூட்டை, மூட்டையாக சில்லறை, ரூ100, 200, 500,2000 நோட்டுக்கள்!! பிச்சைக்காரர் வீட்டில் ஆச்சர்யம்!!

 
ராமகிருஷ்ணா

ஆந்திராவில் காக்கிநாடா, வேலங்கி பகுதியில் வசித்து வருபவர் 75 வயதான ராமகிருஷ்ணா. அங்கிருக்கும் குடிசைப் பகுதியில்  தங்கி இருந்த இவர் கோவில்களில் பிச்சை எடுத்து அன்றாட ஜீவனம் நடத்தி வந்தார்.திடீரென  உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதால் நேற்று உயிரிழந்தார்.

 ராமகிருஷ்ணக்கு உறவினர்கள் யாரும் கிடையாது. இதனால் காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அவர் தங்கியிருந்த குடிசை வீட்டில் சோதனை செய்தபோது சிறு சிறு மூட்டைகளாக ரூபாய் நோட்டுகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது.

அனைத்து மூட்டைகளையும் பிரித்து எண்ணி பார்த்த போது ரூ3,49,500 இருந்தது. மூட்டைகளில்  2000, 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் தனியாகவும் சில்லறை நாணயங்கள் தனியாகவும் இருந்தது. ராமகிருஷ்ணனை தகனம் செய்துவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை சமூக அறக்கட்டளையில் போலீசார் ஒப்படைத்தனர். பிச்சைக்காரராக இருந்தவர் வீட்டிலேயே ரொக்கமாக ரூ3லட்சத்திற்கும் மேல் வைத்திருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பேச்சாக அமைந்தது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web