கார் மோதி பயங்கர விபத்து! தூக்கி வீசப்பட்ட போலீசார் குடும்பம்! 4 வயது மகன் பலி!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அடுத்த வெங்கடேஷ்வராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மார்சல் ராஜா (38). காடல்குடி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தேவிகா (30) என்ற மனைவியும், ரஸ்வந்த் (6), ரிஷாந்த் (4) என இரு மகன்கள் உள்ளனர்.
நேற்று திட்டங்குளத்தில் இருந்து மார்சல் ராஜா தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தொழிற்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற போது எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மார்சல் ராஜா உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிறுவன் ரிஷாந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் பலத்த காயமடைந்த மார்சல் ராஜா மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த சிவராமச்சந்திரன் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!