துரத்தி துரத்தி கடிக்கும் வெறிநாய்கள்!! 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!! அச்சத்தில் பொதுமக்கள்!!

 
வெறி நாய்கள்

மேட்டூர் அருகே தெரு நாய்கள் வெறி கொண்டு கடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மேலும் 3 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த வீரக்கல் புதூர் மற்றும் பி.என்.பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 10க்கும் மேற்பட்ட பொது மக்கள் வெறிநாய் கடித்ததில் படுகாயம் அடைந்துள்ளனர். குன்னூரில் இயங்கி வரும் வெறிநாய் கடிக்கான சிகிச்சை பெறும் மருத்துவமனையில் 3 சிறுவர்கள் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

வெறிநாய்கள்

வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட மற்றவர்களில் சிலர் நாய் கடிக்கு ஊசி போட்டுவிட்டு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து 3 சிறுவர்கள் மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெறிநாய் கடியால் கடுமையான காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சேலம்
தொடர்ந்து வெறிநாய்கள் அப்பகுதியில் அட்டகாசம் செய்து வருவதால் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்து நடுங்குகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து வீதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களிடம் இருந்து மக்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வெறிநாய்கடிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 சிறுவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web