செல்வங்களை அள்ளித் தரும் சதுர்த்தி விரதம்!! வழிபடும் முறை, பலன்கள்!!

 
விநாயகர்

முழு முதல் கடவுள் விநாயகர். இவரை வழிபட அனைத்து நாளும் உகந்த நாளே. நம் வாழ்வின் சங்கடங்களை போக்கவும், வினைகளை களையவும் இந்த சதுர்த்தி நாளில் இல்லத்தில் வழிபட வேண்டும். எந்தப் பொருளில் செய்து எளிமையாக வழிபட்டாலும் பிள்ளையார் நமக்கு அருள்புரிவார்.இன்றைய தினம் அதிகாலை எழுந்து வீடு சுத்தம் செய்து வழக்கமான பூஜைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.

நமது பிரார்தனைகளை மனமுருக சொல்லி இன்றைய தினம் விரதம் முழுவதுமாக பூர்த்தியடைய வேண்டிக்கொள்ள வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருப்பவர்கள் உண்டு. இயலாதவர்கள் பால் பழம் சாப்பிடலாம். மாலை ஆலய வழிபாடு செய்து இறைவனை பிரார்த்தித்து விநாயகரை  7 முறை வலம் வர வேண்டும். வீடு திரும்பி விளக்கேற்றி உபவாசம் முடித்து கொள்ளலாம்

நம் வினைகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப கீழ்க்கண்டவைகளில் பிள்ளையாரை பிடித்து வைத்து இல்லங்களில் செய்து வழிபட்டு வர நம் வாழ்வின் துயரங்கள் நீங்க சகல செல்வங்களையும் பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு .

60 லட்சம் கிரந்தம்! கைவலிக்க எழுதி கொடுத்த பிள்ளையார்!
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். 
குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்
புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.விவசாயம் செழிக்கும்
வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் கரையும்.வளம் தருவார்.
உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும். எதிரிகளை விரட்டுவார்.
வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
செல்வம் உயரச் செய்வார்


விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.

60 லட்சம் கிரந்தம்! கைவலிக்க எழுதி கொடுத்த பிள்ளையார்!
சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்
கல் விநாயகர்- வெற்றி தருவார்
மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web