11ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பம்!! அதிர்ச்சி வாக்குமூலம்!!

 
கர்ப்பம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கீழபாண்டவர்மங்கலத்தில் 11ம் வகுப்பு பள்ளி மாணவி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் மகேந்திரன் (வயது 42) என்பவர் வசித்து வருகிறார். அங்குள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்து வரும் மகேந்திரனுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. 

இந்நிலையில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் மகேந்திரன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்து போன மாணவியிடம், இதுபற்றி வெளியே சொன்னால் உங்கள் குடும்பத்தையே அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி பெற்றோரிடம் தெரியப்படுத்தாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மாணவிகள்

இந்நிலையில் மாணவி திடீரென்று வயிற்று வலியால் துடித்துள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 11ம் வகுப்பு மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது பற்றி அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது, கடந்த 2 ஆண்டுகளாக மாணவிக்கு மகேந்திரன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. 

போக்சோ

இதைத்தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகேந்திரன் மீது புகார் மனு அளித்தனர். புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 குழந்தைகளின் தந்தையாக இருந்த போதிலும் கூட பிளஸ்1 மாணவிக்கு மகேந்திரன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவி தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web