ஜன்னல் திரையை சரி செய்த போது 5 வது மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி!!

 
பலி

கர்நாடக மாநிலம் மங்களூர் நகர், கத்ரி அருகே உள்ள கங்கநாடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் 5வது மாடியில் வசித்து வருபவர் முகமது இம்தியாஸ் (48). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

dead body

இவரது முதல் மகளான சேஷையர் இன்தியாஜ் (15) பிஜய் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் பால்கனியில் சேர் மீது ஏறி திரைச்சீலைகளை சரிசெய்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி வீட்டின் வெளிப்புறம் கீழே விழுந்துவிட்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் அவருக்கு தலை மற்றும் கால்முறிவு ஏற்ப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மங்களூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பால்கனியில் திரையை சேர் மீது ஏறி சரி செய்தபோது தவறிக் கீழே மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web