மீண்டும் அசுர வேகமெடுக்கும் கொரோனா!! விமான நிலையங்களில் தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உட்பட 24 மாவட்டங்களில் மீண்டும் பரவத் தொடங்கி இருப்பதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 15ம் தேதி தமிழகத்தின் மொத்த பாதிப்பு 22 ஆக மட்டுமே இருந்து வந்தது. ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்தே இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க தொடங்கியது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் 3 மாதங்களாக கொரோனாவால் உயிரிழப்புக்கள் ஏதும் இல்லை. நேற்று 18 வயது இளம் பெண் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்குள் நுழைபவர்கள் அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி இவைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது அதே நேரம் இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அனைத்து பகுதியிலும் 'நோ மாஸ்க், நோ எண்ட்ரி' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகின்றன.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே விமானத்தில் பயணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா பரிசோதனையும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சந்தேகப்படும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டை சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து முகவரி, போன் எண்களை குறித்து கொள்கின்றனர். கொரோனா முதல் அலை பாதிப்பின்போது விமான பயணிகள் தவறான எண்களை கொடுத்துவிட்டு சென்றனர். இதனை தவிர்க்க இம்முறை மிகத் தீவிரமாக இதனை ஆய்வு செய்து உறுதி செய்த பிறகே விமான நிலையத்தில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!