அதிர்ச்சி!! இந்தியாவின் ஆல்ரவுண்டர் அஷ்வினுக்கு கொரோனா உறுதி!!

 
அஷ்வின்

 

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அப்போது 5 டெஸ்ட்  போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடந்தன. கடைசி போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அந்த 4 போட்டிகளில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஒத்திவைக்கப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது.

அஷ்வின்

அதற்காக இந்திய அணி கடந்த 16-ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. அப்போது விமான நிலையத்தில் நடைபெற்ற பரிசோதனையில் அஸ்வினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அஸ்வின் இங்கிலாந்துக்கு இந்திய அணியுடன் பயணம் செய்யவில்லை .தற்போது அஸ்வின் தனிமைபடுத்தப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

வரும் 26-ம் தேதிக்குள் அவருக்கு, கொரோனா நெகடிவ் என வரவில்லை என்றால், டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணி கவுண்டி அணியுடன் ஜூலை 24-ம் தேதி முதல் பயிற்சி டெஸ்டில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில் அஸ்வின் பங்கேற்க மாட்டார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அஷ்வின்

அஸ்வின் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் விளையாடுகிறார். இந்திய அணி இனி 6 மாதங்களுக்கு டெஸ்ட் போட்டியே விளையாடாத நிலையில், அஸ்வின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு இந்த நிகழ்வு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டி முடிந்தப் பிறகு, இரு அணிகளுக்கும் இடையில் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர் நடைபெறவுள்ளது. டி20 போட்டிகள் ஜூலை 7,9,10 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் ஜூலை 12, 14, 17 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web