வைத்திலிங்கத்திற்கு கொரோனா உறுதி!! அதிர்ச்சியில் அதிமுகவினர்!!

 
வைத்திலிங்கம்

தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரபலங்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், பணியாளர்கள், சாமானியர்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் எச்சரிக்கை கடிதம் ஒன்றை சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.

கொரோனா

அதில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால் முகக்கவசம், சமூக இடைவெளி இவைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். இதனை அந்தந்த நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது.

அதிமுக

மிக குறிப்பாக ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனித்தனியாக பிரிந்துள்ளனர். தனித்தனியாக தீவிர  ஆலோசனையில் ஈடுபட்டிருந்த பரபரப்பான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம்  நடந்து முடிந்துள்ளது.
இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னை  வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web