பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா!! பீதியில் பொதுமக்கள்!!!

 
நாசர்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3000பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபலங்கள், திரைத்துறையினர் , அரசியல்வாதிகள் , மருத்துவர்கள் என பாரபட்சமின்றி பரவி வருகிறது.

ஸ்டாலின்

நேற்று முன் தினம் முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  கொரோனா தாக்கத்தில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அத்துடன்  முகக்கவசம், சமூக இடைவெளி இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

கொரோனா

இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து  அமைச்சர் நாசர் தனிமைப்பட்டுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று உடற்சோர்வு அதிகமாக இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் எனத்  தெரிவித்துள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web