தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி ஆணையர் திடீர் உத்தரவு!

 
சாவல்களை எதிர்கொள்ளும் விதமாக மாநகராட்சி தயாராக உள்ளது. – மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, தங்களது வீடுகளிலேயே, தங்களை பாதுகாப்பாக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் முழு தகவல்களையும் தனியார் மருத்துவமனைகள் சென்னை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
 

கொரோனா தொற்று உலகம் முழுவதுமே குறைந்து வந்த நிலையில், மக்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்தியாவில், கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. 
கொரோனா

குறிப்பாக, தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுமாறு தொடர்ந்து ஆட்சியர்களுக்கும், அதிகாரிகளுக்கும்  தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
 

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளும், சிகிச்சை மையங்களுக்கும் சென்னை மாநராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா

 அதன்படி, கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் குறித்தும், தங்களது வீடுகளில் பாதுகாப்பாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருபவர்கள் குறித்தும் விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web