குரூப் 1 தேர்வர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் , அரசு முறை தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது நடப்பாண்டில் டி.என்.பி.எஸ்.சி உட்பட அனைத்து வகையான போட்டி மற்றும் வேலை வாய்ப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது குரூப்1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி ஆணையாளர் , துணை பதிவாளர் உட்பட 66 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 பதவிக்கான தரவரிசை பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அனைத்து தேர்வர்களும் ஜூலை 29 ம் தேதி ஆணைக்குழு அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த க் கூட்டத்தில் அனைத்து தேர்வர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!