க்யூட் வீடியோ! வாத்துக்களுக்காக வாகனங்களை நிறுத்திய போக்குவரத்து போலீசார்!
க்யூட்டான வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் சாலைகளை கடக்க கூட்டம் கூட்டமாக நிற்கும் போதும் கூட சில வாகன ஓட்டிகள் நிற்காமல் தொடர்ந்து வாகனத்தை இயக்குவதை நாம் பார்த்து இருப்போம். போக்குவரத்து போலீசார் கையை நீட்டி வாகனங்களை நிறுத்தி பல முறை போக்குவரத்தை சீர் செய்து மக்கள் நெடுஞ்சாலையை தாண்டி செல்ல உதவுவதையும் பார்த்து இருப்போம். ஆனால் இங்கு கதையே வேறு.
பிரான்ஸ் நாட்டின் பாரிசின் பிரதான சாலை ஒன்றில் திடீரென்று ஒரு வாத்து தனது குட்டி வாத்துகளுடன் கூட்டமாக இடையே புகுந்துள்ளது. இதைப் பார்த்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் திடுக்கிட்டு அவற்றுக்கு உதவி செய்ய முற்பட்டார். உடனே வாத்துக் கூட்டம் சாலையை கடப்பதற்காக மொத்த சாலையையும் சற்று நேரத்துக்கு மறித்து நிறுத்தி இருக்கிறார். வாத்துக்கூட்டம் அழகாக சிறிய பாதங்களைக் கொண்டு இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்து சென்றது அங்கிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் மக்களை வெகுவாக கவர்ந்தது.
Meanwhile in Paris.. 🙏
— Buitengebieden (@buitengebieden) June 26, 2022
🎥 IG: licsu pic.twitter.com/xWRIfKwkXN
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அங்கிருந்த மக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.தற்போது இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மனிதநேயம் என்பது மனிதன் சக மனிதனுக்கு செய்யும் உதவி மட்டுமல்ல, மனிதன் பறவை, விலங்கு உள்ளிட்ட பிற உயிர்களுக்கும் உதவுவதுதான் என்பதை இந்த வீடியோ நம் கண்முன்னே கொண்டு வந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!