அட!! மூன்றே நாட்களில் 57000 விண்ணப்பங்கள்!! முடிவுக்கு வந்த போராட்டங்கள்?!

 
அக்னிபாத்

 இந்தியாவில் முப்படைகளில் அதிக அளவு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலைகள், கிளர்ச்சிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜூன்24 ம் தேதி  அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன. 

அக்னிபாத்
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விதிகள், நிபந்தனைகள்  குறித்த அறிவிப்பு ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதில் பொதுப்பணி, தொழில்நுட்பம், கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் பிரிவினருக்கான முன்பதிவு ஜூலையில் தொடங்கும் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. 
மேலும் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன்  24ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும்,  அத்துடன் இதற்கான ஆன்லைன் தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் எனவும்  இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை careerindianairforce.cdac.in என்ற அதிகாரப்பூர்வ இந்திய விமானப்படை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .


இதனையடுத்து கடற்படை மற்றும் விமானப்படையில் ஆள்சேர்ப்புக்கான அறிவிப்புகளும் வெளியிடபடலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.   முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியவும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேரவும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 24 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை விமானப் படை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விமானப் படையில் சேர்வதற்கு, https://indianairforce.nic.in/ அல்லது https://www.careerindianairforce.cdac.in/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்னிபாத்  போராட்டம் ரயில் எரிப்பு

இந்நிலையில் ஜூன் 24ம் தேதி முதல் அக்னிபாத் திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியாகி 3 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இதுவரை  இத்திட்டத்தில் இணைய 57000 இளைஞர்கள் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் அக்னிபாத் திடம் குறித்து நல்ல விழிப்பு உணர்வு இருந்து வருகிறது.  குழப்பம் விளைவித்தது இளைஞர்கள் பெயரில் சமூக விரோதிகளாக இருக்கலாம். அல்லது அவர்களுடைய பின்னணியில் வேறு யாரோ இருக்கலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் இணைய மூன்று நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருப்பது மக்கள் மத்தியில் இத்திட்டம் வரவேற்பு பெற்றிருப்பதாகவே கருதப்படுகிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web