காதலிக்க சொல்லி கல்லூரி மாணவிக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்! சென்னையில் அடுத்த அதிர்ச்சி!
சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் சித்ரா. . இவர் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். இவருடைய மகள் 18 வயது கவிதா . கல்லூரியில் படித்து வரும் கவிதாவை அதே பகுதியில் வசித்து வரும் 28 வயதான ரஷீத் காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவரது காதலை கவிதா ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், அக்டோபர் 13ம் தேதி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சித்ராவும், கவிதாவும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது ரஷீத் வீட்டிற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். கவிதாவை காதலிக்கிறேன். எனது காதலை கவிதா ஏற்க மறுத்து வருகிறார். பைத்தியம் போல, கவிதா பின்னால் சுற்றி வருகிறேன். கவிதா இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. எனவே எனக்கு கவிதாவை திருமணம் செய்து தரவேண்டும், என்று ரஷீத் கூச்சல் போட்டுள்ளார்.
இதற்கு சித்ராவும், கவிதாவும் மறுப்பு தெரிவித்தனர். உடனே வாலிபர் ரஷீத் அவர்கள் மீது பாய்ந்து தாக்க முற்பட்டார். பயத்தில் கவிதாவும், சித்ராவும் கூச்சல் போட்டனர். உடனே அங்கிருந்து வெளியேறிய ரஷீத், என்னைக்கு இருந்தாலும், நான்தான் கவிதா கழுத்தில் தாலி கட்டுவேன், இல்லாவிட்டால், கொலை விழும், என்று மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார்.
இது குறித்து சித்ரா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சைக்கோ போல மிரட்டிவிட்டு சென்ற வாலிபர் ரஷீத் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!