சிங்கப்பூர் அதிபருக்கு கொலை மிரட்டல்!!! பரபரக்கும் உலக அரசியல்!!!

 
சிங்கப்பூர்

ஜப்பான் பிரதமர் துப்பாக்கி சூட்டில் பலியானது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமருக்கு 45 வயது நபர் பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே நேற்று நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் மக்கள் முன்பாக பேசிக்கொண்டிருந்த போது டெட்சுயா யாமகாமி என்ற நபர் அவரை திடீரென்று துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த அபே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மரணம் சர்வதேச நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

arrest

அதற்குள் தற்போது மேலும் ஒரு பெரிய பரபரப்பு சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமர் லி ஷியன் லாங்கை கொலை செய்துவிடுவதாக கூறி பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அதனை பதிவிட்ட 45 வயதான நபரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அந்த மர்ம நபரிடம் இருந்து லெப்டாப், டெப்லெட், 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மர்ம நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

abe

பிரதமர் லி ஷியன் லாங்கை ஏன் கொலை மிரட்டல் விடுத்தார்? அந்த மர்ம நபர் யார்? அவரின் பெயர் என்ன என்பது போன்ற விவரங்களை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். சர்வதேச அளவில் ஜப்பான் முன்னாள் பிரமதர் ஷின்சோ அபேயின் மரணம் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிங்கப்பூர் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web