அடுத்த 3 நாட்களுக்கு வெளியே போகாதீங்க! 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 
இடி மின்னல் மழை

ரொம்ப ஜாக்கிரதைய வேலையை திட்டமிட்டு, வெளியே செல்லுங்க.. மறக்காம அவசியமான வேலையிருந்தா மட்டும் குடையோட கிளம்புங்க. இன்னைக்கு தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தின் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் எனவும் , 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இடி மின்னல் மழை
அத்துடன்  ஜூன் 15,16, 17ம் தேதி தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்காலில்  பெரும்பாலான இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இது தவிர லட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதி,கேரளா,  கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த காற்று வீசலாம் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web