உறவினர்கள் மோதலால் நண்பர்கள் இரட்டைக்கொலை!! விருதுநகரில் பரபரப்பு!!

 
கொலை

விருதுநகர் மாவட்டம் வச்சக்காரபட்டி அருகே தடங்கம் கிராமத்தில் வசித்து வருபவ்ர் 22 வயதான  சந்தனக்குமார் . இவருடைய நண்பர் 19 வயது மணிகண்டன்  இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சந்தனக்குமாரும் அவரது நண்பர் மணிகண்டனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கிராம மக்கள் கொடுத்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கத்திக்குத்து

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியைத் தீவிரமாக தேடி வந்த நிலையில், சந்தனக்குமாரின் தந்தையுடைய சகோதரர் மகனான மற்றொரு மணிகண்டன் (26) என்பவருக்கும் சந்தனகுமாருக்கும் இடையே ஆடு மேய்க்கும் தொழிலில் முன்விரோதம் இருந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு நண்பருடன் சந்தனகுமார் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மற்றொரு மணிகண்டன் சந்தனகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடியாக மாறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறுப்படுகிறது.

virudhunagar

அப்போது உறவினர் மணிகண்டன் திடீரென மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சந்தனகுமார் மற்றும் அவரது நண்பர் மணிகண்டனை வெட்டியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் கொலை செய்த மணிகண்டன் தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.வச்சக்காரபட்டி அருகே தடங்கம் கிராமத்தில் ஆடு மேய்க்கும் இரண்டு நண்பர்கள் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web