திரௌபதி முர்மு நெகிழ்ச்சி!! ஏழை வீட்டு மகள் இந்தியாவின் முதல் குடிமகள்!!

 
திரௌபதி முர்மு

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக வந்து சேர்ந்த திரௌபதி முர்முவுக்கு 21 குண்டுகள் முழங்க பதவியேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியாவின் 2-வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரௌவுபதி முர்மு பெற்றுள்ளார்.

திரௌபதி முர்மு

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு திரௌபதி முர்பு விழாவுக்கு முன்னதாக சென்றிருந்தார். அங்கு அவரை ராம்நாத் கோவிந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திரௌபதி முர்மு இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா திரவுபதி முர்முவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்பு முதன்முதலாக திரௌபதி முர்மு பேசும்போது, ‘‘குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டது பெருமை அளிக்கிறது. என்னை தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புதிய பொறுப்பை நிறைவேற்ற உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு பெரும் பலமாக இருக்கும். எனது வலிமை என்பது நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான். இந்த பதவியை கவுரவிக்கும் வகையில் நான் செயல்படுவேன்" என்று கூறினார்.பதவியேற்பு விழா நிகழ்ச்சியில், ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், மக்களவை எம்.பி.க்கள், முப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web