குடிபோதை! பீர்பாட்டிலால் மகனை குத்திய தந்தை! கணவனை வெட்டிக் கொன்ற மனைவி!

 
அமுதா

தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்கிற புலம்பல்கள் கிராமங்களில் மட்டுமல்லாமல், நகரங்களிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது. நள்ளிரவில் நிறை போதையில், போலீசாரிடம் வாக்குவாதம் செய்வது, போலீசாரை ஏற்றிக் கொல்ல முயற்சிப்பது என துவங்கி, கற்பழிப்பு, பழிக்கு பழி என 80 சதவிகித குற்றங்களுக்கு குடி தான் காரணமாக அமைகிறது. இந்நிலையில், குடிபோதையில் தனது கண் எதிரிலேயே மகனை, பீர்பாட்டிலால் குத்திய கணவனை,  ஆவேசத்தில் வெட்டிக் கொன்றார் தாய். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த கொற்கை கிராமத்தில் வசித்து வந்தவர் மகாதேவன் (53). இவருக்கு அமுதா (37) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குடிபழக்கத்திற்கு அடிமையான மகாதேவன் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதும், மனைவியை அடிப்பதுமாக இருந்து வந்திருக்கிறார். அப்படி 3 மாதங்களுக்கு முன்பு நடந்த சண்டையில் மகாதேவன் மனைவியின் வலது கையை உடைத்து இருக்கிறார்.

அமுதா

இந்த நிலையில் நேற்று இரவு குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் சண்டையிட்டு 500 ரூபாய் பணத்தை வாங்கி சென்றுள்ளார். அத்துடன் வீட்டில் வந்து சாப்பிடுவதற்காக 2 பீர் பாட்டில்களையும் கையோடு வாங்கிக் கொண்டு வந்தவர், குடி போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனைக்கண்ட அவரது மூத்த மகன் ராஜராஜ சோழன், தாயை அடிக்காதவாறு, தனது தந்தையை விலக்கி விட்டுள்ளார். குடிபோதையில் இருந்த மகாதேவன் ஆத்திரத்தில் தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் குத்தி கிழித்துள்ளார். அதில் மகன் ராஜராஜ சோழனுக்கு பாட்டில் கிழித்து காயம் ஏற்பட்டது.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

பதறிப்போய் ஓடிவந்த அமுதா கணவனைத் தடுக்க முயன்ற போது மகாதேவன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமுதா கையிலிருந்த அரிவாளைப் பிடுங்கி கணவனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த மகாதேவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனையடுத்து தன் மகனுடன் மணல்மேடு காவல் நிலையத்திற்கு வந்த அமுதா, தன்னுடைய கணவன் கொலை செய்யப்பட்டதைச் சொல்லி சரனடைந்தார். உடனடியாக அமுதாவின் வீட்டிற்கு சென்ற போலீசார் மகாதேவன் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் தன்னையும், மகனையும் தாக்கிய கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web