குடித்து விட்டு நிர்வாணமாக்கி கொடுமை! கழுத்தை இறுக்கி கணவனைக் கொன்ற மனைவி!

 
முத்துலட்சுமி

கணவனை பனியனால் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு அவர்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையை குலைத்து விடுகிறது. இதனால் அவர்களுக்குள் ஏற்படும் வாக்குவாதம் கைகலப்பில் முடிந்து விடுகிறது. அதிவும் முற்றி கொலையில் முடிந்துவிடுவது துரதிருஷ்டம்தான். அந்த வகையில் தன்னை அடித்து துன்புறுத்திய கணவனை கொலை செய்த சம்பவம் சென்னை ராயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயபுரத்தில் உள்ள சோமு செட்டி தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (40). இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சரவணன் ராயபுரம் பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகிறார்.

போலீஸ் க்ரைம் கொலை தற்கொலை

சரவணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மது குடித்துவிட்டு சரவணன், தனது மனைவி முத்துலட்சுமியை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும் முத்துலட்சுமிக்கு தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் நிலம் ஒன்று உள்ளது. அதனை விற்றுத்தருமாறு சரவணன் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி இருக்கிறார்.

இது குறித்து நேற்று திடீரென்று சரவணன், முத்துலட்சுமிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், முத்துலட்சுமியின் உடை அனைத்தையும் களைந்து வீட்டை விட்டு அடித்து வெளியில் துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பொறுமையிழந்த முத்துலட்சுமி, சரவணனின் பனியனால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை

பின்னர் முத்துலட்சுமி கணவரின் தம்பியை போனில் தொடர்பு கொண்டு சரவணன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். முத்துலட்சுமியின் பேச்சால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார், முத்துலட்சுமியிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அதில் முன்னுக்கு பின் முரணமாக முத்துலட்சுமி பதில் அளித்ததால் போலீசின் சந்தேகம் வலுத்தது. இறுதியில் முத்துலட்சுமி, தனது கணவர் சரவணனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கணவன், மனைவி பிரச்சினை இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் ராயபுரத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web