அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு!! தொண்டர்கள் உற்சாகம்!!

 
இபிஎஸ்


அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவரது தொண்டர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்.பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது பொதுக்குழு தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார்.

சசிகலா ஒபிஎஸ், இபிஎஸ்

அதில், ‘‘அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான கட்சி சட்ட விதி 20அ- ஐ மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும்  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளுக்கு மாற்றாக கழக பொதுச்செயலாளர் என்று விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் அதிமுகவில் இருந்து வந்த கழக ஆலோசனைக்குழு நீக்கம் செய்யப்படுகிறது.அ.தி.மு.க. பொதுக்குழுவில்  முத்தாய்ப்பாக இடைக்கால எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக அனைவராலும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இபிஎஸ்

இன்னும் 4 மாதங்களில் அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் எடப்பாடி பழனிசாமியின் தொண்டர்கள் ஆரவாரமாக கோஷமிட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். நுழைவு வாயியில் பெண் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web