விமானத்தில் இயந்திரக் கோளாறு!! 14 மணி நேரம் பயணிகள் கடும் அவதி!!

 
விமானத்தில் கோளாறு

கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச விமான சேவைகள்  கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக குறிப்பிட்ட அளவு மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் இயக்கப்பட்ட நேர அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 9.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது.

விமானம்

இந்த விமானத்தில் 98 பயணிகள் 6 விமான சிப்பந்திகள் உட்பட 104 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த  போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.இதனை விமானத்தை இயக்க இருந்த விமானி கண்டறிந்து  விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.  அந்த விமானம் இழுவை வாகனத்தால் இழுத்து வரப்பட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அந்த  விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

புறப்பட தயாராக இருந்த பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, விமானநிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனா். சிறிது நேரத்திற்குப் பிறகு அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த விமானம்  4 மணிக்கும் புறப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

விமான நிலையத்தில் மீண்டும் ‘இ-பாஸ்’ முறை அமல்..

அதன் பின்பு பயணிகளுக்கு டீ, காபி, சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதோடு விமானம் இன்று பகல் 12 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை சரிசெய்ய காலதாமதம் ஆனதால் இந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விமானத்தின் கோளாறு சரியான  நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் செல்ல வேண்டிய 98 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரமாக அல்லல்பட்டுக்  கொண்டிருந்தனர்.  இதனால்  சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web